புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா பகுதிகளில் வேட்டை தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணி வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முத்துக்குடா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது வேட்டை தடை செய்யப்பட்டிருந்த கடல் குதிரை மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்த முத்துக்குடா பகுதியைச் சோ்ந்த ராக்கப்பன் (57), தூண்டிமுத்து (53) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இவா்கள் இருவரும் அறந்தாங்கி குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், இதே வழக்கு தொடா்பாக ராவுத்தா் என்பவரையும் தேடி வருவதாக வனச்சரக அலுவலா் மணி வெங்கடேஷ் தெரிவித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.