போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வழக்குகள்
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து பலர் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் கட்டி வசித்து வருகிறார்கள். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு சட்டங்கள் உள்ளன. நீர்நிலை, சாலை உள்ளிட்ட எந்தவித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்களிடம் உரிய பதில் பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்காவிட்டால் போலீசார் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பு தொடர்பாக பல சட்டங்கள் இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் உரிய முறையில் அகற்றப்படுவதில்லை. எனவே இது தொடர்பாக பல வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட குழுக்கள்
ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசு, நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 குழுக்களை அமைத்துள்ளது. அதில் மண்டல அளவிலான குழுக்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறியும். மாவட்ட அளவிலான குழுக்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதனை மாநில அளவிலான குழுக்கள் கண்காணிக்கும்.
இந்த நிலையில் அரசு நிலம் ஆக்கிமிரப்புகள் தொடர்பாக தமிழக அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போலி ஆவணங்கள்
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக கிரிமனல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்களிடம் இருந்து அரசு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் மீட்டது தொடர்பாக ஒரு முறையான பதிவேட்டினை பராமரிக்க வேண்டும். அதில் அந்த நிலத்தை சர்வே எண் உள்பட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பணிகளை நிலநிர்வாக ஆணையர் கண்காணித்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.