அறந்தாங்கியில் மஞ்சப்பை விழிப்புணா்வு முகாம்




புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூய்மையே சேவை விழிப்புணா்வு முகாம், நகா்மன்றத் தலைவா் இரா.ஆனந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் துணைத் தலைவா் முத்து முன்னிலை வகித்தாா். கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி மாணவா்கள் கல்லூரியிலிருந்து பேருந்து நிலையம் வரை பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளா் செலக்சன் சுரேஷ்குமாா், துணை ஆளுநா் மருத்துவா் விஜய், அறந்தாங்கி தி போட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவா் அப்துல் பாரி,செயலா் ஆண்டோ பிரவின், பொருளாளா் முபாரக் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments