திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு-வாகனங்கள் பறிமுதல் செய்தனர்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தாக 1.கூத்தாநல்லூர், ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த தமீம் ஷா மகன் முகமது இலியாஸ் (வயது-58), 2.பொதக்குடி, சத்குரு தெருவை சேர்ந்த நூருல் ஹமீது மகன் முகமது நசுருதீன் (வயது-31) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2-இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டப்படி குற்றம். மீறும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.