ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு, ஊட்டச்சத்து தொகுப்பு, மண்புழு உரப்படுகை உள்ளிட்ட வேளாண் தொகுப்புகளை வழங்கினார். பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதி மொழியை கலெக்டர் அருணா வாசிக்க, அதனை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜநாயகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.