விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை




புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உண்டாகியுள்ளதால் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை மீன்பிடி தளத்தில் நிறுத்தி உள்ளனர். மேலும் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments