பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் யூ.டி.எஸ். என்ற செயலி மூலமாக முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் எடுப்பது குறித்து ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட பட்டுக்கோட்டை பிரிவு வணிக ஆய்வாளர் சக்தி, நிலைய மேலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கு செயலி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்றும், நேரம் மிச்சமாகும் என்றும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் கலியபெருமாள், பட்டுக்கோட்டை ரெயில் உபயோகிப்போர் சங்க தலைவர் விவேகானந்தம், துணைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் தமிழ்செல்வன், ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த சந்திரமோகன், ரெஜினால்ட் செல்வகுமார் என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தை சார்ந்த ஜெயசீலன், சுகுமார் மற்றும் ரெயில் பயணிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி பட்டுக்கோட்டை ரெயில் உபயோகிப்போர் சங்கத்தின் சார்பில் யூ.டி.எஸ். செயலி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.