புதுக்கோட்டையில் அக். 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்




புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாநிலம் முழுவதும் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மு. அருணா தலைமையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது, சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, பேருந்து வசதிகள் செய்வது, பாதுகாப்பு வசதிகள் செய்வது போன்றவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், ‘தாட்கோ’ மேலாளா் எல். அனிட் லிமலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments