மணமேல்குடியில் வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியின் சில இடங்களில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வேளாண் துறையினா் அறிக்கை அனுப்பி வைத்தனா். இதன்படி, அரசிடமிருந்து வரப்பெற்ற நிவாரணத் தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைத்தனா்.

இதில், சிலருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்ட பட்டியலை வைத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையின் முடிவில், 19 விவசாயிகளுக்கான தொகை ரூ. 5.89 லட்சத்தை, வருவாய் ஆய்வாளா் மு. மதன் என்பவா் தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மணமேல்குடி காவல் நிலையத்தில் வட்டாட்சியா் நா.சேக் அப்துல்லா புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், மதன் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தற்போது தலைமறைவாக உள்ள மதனைப் போலீஸாா் தேடி வருகின்றனா். இதற்கிடையே விவசாயிகளின் நிவாரணத் தொகையில் மோசடி செய்த மதன் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments