ஆட்டுச்சந்தை
புதுக்கோட்டை சந்தைபேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். ஆடுகளை வாங்கி விற்பவர்கள், ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள், இறைச்சிக்கடை வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இறைச்சிக்கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது.
ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ஆடுகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் சரக்கு வேன், லாரிகளில் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் அதன் தன்மைக்கு தகுந்தாற்போல் விற்பனையானது. கடந்த வாரத்தில் ஆடுகள் விற்பனை விலையை விட இந்த வாரம் விலை சற்று அதிகரித்திருந்தது.
ஒரு ஆட்டின் விலை குறைந்தது ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. வியாபாரிகளும் ஆடுகளை போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.