கடலில் மூழ்கினார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள ஒரு தோப்பில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு ஆறுமுகம் வந்தார். அப்போது மீன் பிடித்தளத்தில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென கடலில் தவறி விழுந்து மூழ்கினார். ஆனால் அவர் கடலில் தவறி விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
முதியவர் பலி
சிறிது நேரம் கழித்து அந்த பகுதிக்கு மீனவர்கள் வந்துள்ளனர். அப்போது கடலில் ஒருவரின் உடல் மிதப்பதை பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், கடலோர காவல் குழுமத்தினர், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.