ஜெகதாப்பட்டினத்தில் கடலில் மூழ்கி முதியவர் பலி




ஜெகதாப்பட்டினத்தில் கடலில் மூழ்கி முதியவர் பலியானார்.

கடலில் மூழ்கினார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள ஒரு தோப்பில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு ஆறுமுகம் வந்தார். அப்போது மீன் பிடித்தளத்தில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென கடலில் தவறி விழுந்து மூழ்கினார். ஆனால் அவர் கடலில் தவறி விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

முதியவர் பலி

சிறிது நேரம் கழித்து அந்த பகுதிக்கு மீனவர்கள் வந்துள்ளனர். அப்போது கடலில் ஒருவரின் உடல் மிதப்பதை பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், கடலோர காவல் குழுமத்தினர், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments