புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் கருப்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைனாக்குடி கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (வயது 50) என்பவர் கருப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில் 25-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து நடக்காமல் உள்ளது. ஆனால் ஆவுடையார்கோவிலில் இருந்து மீமிசல் வரை உள்ள 22 கிலோ மீட்டர் சாலையில் வேகத்தடைகள் அதிகம் இல்லை. இதனால் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நடந்து வருகிறது.
எனவே கருப்பூரில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஆவுடையார்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் உத்தரவின் பேரில், சாலைப் பணியாளர்கள் கருப்பூர் பஸ் நிறுத்தத்தில் 2 புறமும் வேகத்தடைகளை அமைத்தனர். மேலும் கோரிக்கையை ஏற்று வேகத்தடை அமைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், சாலை பணியாளர்களுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.