வளர்ச்சி பணிகள்
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ருத் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் அம்ருத் திட்டத்தில் ரூ.8 கோடி அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு மும்முரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் பழமையானதாகும். இந்த தோற்றம் தற்போது புதுப்பொலிவுடன் மாற உள்ளது.
முகப்பு தோற்றம்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் தரைத்தளத்தில் ஏற்கனவே இருந்த சிமெண்டு தளம் போன்றவை அகற்றப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் தற்போதைய முகப்பு கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட மாதிரி புகைப்படத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில் அதற்கான பணிகள் தற்போது ரெயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.