மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்வு




புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்களை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி அமுதா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. 

மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள்  திரு சசிகுமார்  திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இந்நிகழ்வில்  10 கற்றல் மையங்களுக்கு  சிலேட்டு , நோட்டு  சிலேட்டு எழுதுப் பொருட்கள் மற்றும் பென்சில் போன்ற பொருட்கள் 10 மையங்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மையங்களின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு எழுதுபொருட்களை பெற்று  சென்றனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments