கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில்   79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா நிகழ்வில் தலைமை ஆசிரியர் வரவேற்புறை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்  SRM.சேக் பரீது   அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள். ஜமாத் செயலாளர் எஸ்.முகமது இப்ராகிம் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்றார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

நமது ஊர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு GPM மக்கள் மேடை சார்பாக கேடயம் மற்றும் ஊக்கத்தொகை அளித்து கௌரவிக்கப்பட்டது.

மேலும் ஆசிரியர் S.சாகுல் ஹமீது  நன்றியுறை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது. 























எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments