மணமேல்குடி ஒன்றியத்தில் வட்டார அளவிலான மன்ற போட்டிகள் இலக்கிய மன்றம் வினாடி வினா சிறார் திரைப்பட போட்டிகள் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மன்ற போட்டிகள் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்புக்குரிய திரு செழியன் அவர்கள் திருமதி அமுதா அவர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் வட்டார அளவிலான மன்றப் போட்டிக்கான இலக்கிய மன்றம் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல் மற்றும் வினாடி வினா சிறார் திரைப்படம் ஒளிப்பதிவு மற்றும் திரை விமர்சனம் கதை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.
வட்டார அளவிலான போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
இப்போட்டியானது மாணவர்களின் இலக்கிய திறனையும் மொழித்திறனையும் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் சிந்திக்கும் வகையில் அமைந்துள்ளது.
இப் போட்டியில் நடுவர்களாக தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.