புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான குரூப்-2, 2 ஏ போட்டி தேர்வுக்கான அறிவிப்பில் 828 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் குரூப்-2, 2 ஏ தேர்வுக்கான முதன்மைத்தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு கடந்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், நுழைவுச்சீட்டு நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கட்டணமில்லா பாடக்குறிப்புகள்
இந்த பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும் ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. வாராந்திர மாதிரி தேர்வுகளும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
முதன்மைத்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.