புனிதமிக்க அரஃபா நோன்பை முன்னிட்டு, கோபாலப்பட்டிணம் ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக இன்று (புதன்கிழமை) பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நமது 'ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை'யின் மக்கள் நலப்பணிகளின் ஒரு பகுதியாக, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட உள்ளது. இன்று (27-05-2026) புதன்கிழமை மாலை 3:30 மணியளவில், நமது ஊர் பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் இந்த நோன்பு கஞ்சி விநியோகம் நடைபெறும்.
எனவே, நமது ஊர் பொதுமக்கள் மற்றும் நோன்பாளிகள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து நோன்பு கஞ்சியைப் பெற்றுச் செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜிபிஎம் சொந்தங்கள் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.