கோபாலப்பட்டிணத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று மாலை திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் அரைமணி நேரம் மிதமான மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீரென பெய்த இந்த மிதமான மழையினால் இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments