ரேஷன் கடைகளில் வருகிற 31-ந் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்




புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இம்மாதம் 31-ந் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்ய வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகையினை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள இறந்த உறுப்பினர்களது பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்திட வேண்டும், என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments