அபாகஸ் போட்டியில் கோபாலப்பட்டிணம் மாணவர்கள் மாநில அளவில் சாதனை!



சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான யூசிமாஸ் (UC MAS) அபாகஸ் போட்டியில், பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று மாநில அளவில் பல்வேறு இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இதில் கடந்த ஓராண்டாகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திறம்படப் போட்டியிட்டுப் பின்வரும் தரவரிசைகளைக் கைப்பற்றினர்:
மாணவர் சாதனைகள்
A.ஹாஜரா
த/பெ அசரப் அலி
கோபாலப்பட்டிணம்
மாநில அளவில்
4-ஆம் இடம்
Y.ஆபிக் அகமது
த/பெ ஓய்சுல் கருணை
கோபாலப்பட்டிணம்
மாநில அளவில்
5-ஆம் இடம்
M.முகமது ரிஃபான்
த/பெ முகமது யூசுப்
கோபாலப்பட்டிணம்
மாநில அளவில்
5-ஆம் இடம்
A.அஃப்ரா பாத்திமா
த/பெ அபூபக்கர்
ஜெகதாப்பட்டிணம்
மாநில அளவில்
6-ஆம் இடம்
 
மாநில அளவில் சாதனை படைத்து பள்ளிக்கும், கோபாலப்பட்டிணம் மண்ணிற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் திரளான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 
 
கோபாலப்பட்டிணம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் GPM மீடியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும், பாரட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றோம்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments