புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் வளர்ப்புப் பூனை ஒன்று தெருநாய்கள் கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் புகார்கள்
கோபாலப்பட்டிணம் வீதிகளில் கூட்டமாகச் சுற்றும் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து நிலவுவதாகக் கூறி, கடந்த 10/08/2026 அன்று GPM மீடியாவில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றச் செயலரைத் தொடர்புகொண்டு தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என GPM மீடியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த 15/08/2026 அன்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டதுடன், தீர்மானம் நிறைவேற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், ஊராட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சோக சம்பவம்
நிர்வாகத்தின் அலட்சியத்தால் தெருநாய்களின் பெருக்கம் தீவிரமடைந்த நிலையில், நேற்று (21/08/2026) வீட்டை விட்டு தற்செயலாக வெளியே வந்த செல்லப் பிராணியான பூனையை, தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் கூட்டமாகச் சூழ்ந்து கடித்துக் கொன்றன. இச்சம்பவம் நடந்த நேரத்தில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அவ்வழியாக வந்துகொண்டிருந்த காட்சி அப்பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.
பொதுமக்கள் வேதனை
நாய்களின் அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரித்தும் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துவிட்டது. இன்று ஒரு உயிரினத்திற்கு நடந்த இந்தத் துயரம், நாளை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது பாதசாரிகளுக்கோ ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன், கோபாலப்பட்டினம் பகுதியில் அச்சுறுத்தல் அளிக்கும் தெருநாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.