கோபாலப்பட்டிணம் அரசுப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா: சாதனை மாணவர்களுக்கு GPM மக்கள் மேடை சார்பில் கௌரவிப்பு!




கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (ஆக.15) 80-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், 2025–2026-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ‘GPM மக்கள் மேடை’ சார்பாக நினைவுக் கேடயமும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலோசனை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

சாதனை படைத்த மாணவர்கள் விவரம்

பத்தாம் வகுப்பு
முதலிடம்:ஜோ.ஸ்ரீவித்யா (த/பெ ஜோதிமணி) – 401 மதிப்பெண்கள்
இரண்டாமிடம்:சி.ரபியா பேகம் (த/பெ சித்திக் அலி) – 383 மதிப்பெண்கள்
மூன்றாமிடம்:மு.அகமது (த/பெ முகம்மது யூசுப்) – 369 மதிப்பெண்கள்

பன்னிரண்டாம் வகுப்பு
முதலிடம்:ஜி.முகம்மது ஜாபிர் (த/பெ ஜியாவுர் ரஹ்மான்) – 527 மதிப்பெண்கள்
இரண்டாமிடம்:அ.ஹரிகரன்பிரபு (த/பெ அப்துல் வஹாப்) – 524 மதிப்பெண்கள்
மூன்றாமிடம்:கா.ராஜலெட்சுமி (த/பெ காளிமுத்து) – 512 மதிப்பெண்கள்

சாதனை படைத்து ஊருக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களை 'GPM மக்கள் மேடை' நிர்வாகிகள், உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் அனைவரும் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
 







எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments