யாருக்கு பாவமன்னிப்பு?
1) மனிதன் தன் செய்த தவறை உணர வேண்டும்,
2) தான் செய்த தவருக்காக வருந்த வேண்டும்,
3) தான் செய்த தவறுக்காக அல்லஹ்விடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்,
4) மீண்டும் அதே தவறை செய்யாமலிருக்க வேண்டும்,
இது தான் (தவ்பா செய்வதின்) பாவ மன்னிப்பு தேடுவதின் நிபந்தனை - மேலும்
மனிதர்களுக்கு அநியாயம் செய்து விட்டு அபகரித்து விட்டு அவமானப்படுத்திவிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் அது நடவாது .மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிக்காமல் விட மாட்டான். செய்த நன்மைகளை இழக்க வேண்டியிருக்கும் அல்லது அநீதி இழைக்கப்பட்டவரின் பாவச்சுமையை தான் சுமக்க வேண்டியிருக்கும். இத்தகையவர்களை 'முப்லிஸ்' பெரும் நஷ்டவளிகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே இவ்வுலகிலேயே மனிதர்களில் யாருக்கேனும் அநியாயம் செய்திருந்தால் அபகரித்து இருந்தால் திருப்பி கொடுக்க வேண்டும் – பரிகாரம் செய்ய வேண்டும் – அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – இருவரும் சமாதானம் ஆன பிறகு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் அருள் புரிபவனாகவும் இருக்கிறான்.
அல்லாஹ்விடன் அதிகமாக பிரார்த்திப்போம்.
பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம்(பிரார்த்தித்து) கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 10709
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.