ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள் ஆவுடையார்கோயில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம்.!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ரேசன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.


ஆவுடையார்கோயில் தாலுகாவிற்குட்பட்ட கிராமம் ஆர்.புதுப்பட்டிணம். இந்த கிராமத்தில் சுன்னத்துல் ஜமாத்தை சேர்ந்த 250 குடும்பங்கள் ஒரு பிரிவாகவும், தவுகீத் ஜமாத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் ஒரு பிரிவாகவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் இரு தரப்பினருக்கிடையே கடந்த சில வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னை முற்றிய நிலையில் இருதரப்பினரையும் ஆவுடையார்கோயில் தாலுகா அலுவலகத்தில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து தபால் அனுப்பப்பட்டது. 

இதனையடுத்து இரு தரப்பினரையும் சேர்ந்தவர்கள் தனித்தனியாக தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்டனர். அப்போது 250 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு எதிர்தரப்பினர் தொடர்ந்து பிரச்னை செய்து வருவதாக காரணம் காட்டி ரேசன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments