தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குறைந்தபட்ச ரீ சார்ஜுக்கு செக் - ட்ராய் கிடுக்குப்பிடி



குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கமிங் கால்களை நிறுத்தக்கூடாது என சிம் நிறுவனங்களை ட்ராய் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களாக ஏர்டெல், வோடாஃபோன், ஏர்செல் மற்றும் ஐடியா ஆகியவை திகழ்ந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் அனைத்து ஜியோவின் வருகைக்குப் பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக ஜியோவின் இலவச டேட்டா மற்றும் அழைப்புகளால் அனைத்து சிம் நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் தங்கள் நிறுவனத்தையே மூடிவிட்டனர். அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனத்தின் ஆஃபர்களால் மற்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், தங்கள் செல்போன்களில் இரண்டாவது சிம் ஆக ஜியோவை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இவ்வாறு பயன்படுத்தும் வாடிக்கயாளர்கள் தங்கள் முதல் சிம் கார்டை (ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா) வெறும் இன்கமிங் கால்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து டேட்டா ரிசார்ஜ்களையும் ஜியோவில் செய்துகொள்கின்றனர். இந்த நிகழ்வை மாற்றுவதற்காக மற்ற சிம் நிறுவனங்களும் ஆஃபர்களை வாரி இரைத்தனர். ஆனாலும் பலர் ஜியோவின் ஆஃபர்களில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் தான் ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு புதிய கட்டண விதியை கொண்டுவந்தன.

புகார்களின் எதிரொலியாக, குறைந்தபட்ச ரிசார்ஜ் செய்யவில்லை என சிம் நிறுவனங்கள் சேவையை நிறுத்தக்கூடாது என்று ட்ராய் எச்சரித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தங்கள் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்னரே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, சிம் நிறுவனங்களின் கட்டண விவரங்களில் ட்ராய் தலையிடுவதில்லை என தெரிவித்துள்ளார். அதேசமயம் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்ற காரணத்தைக் கூறி வாடிக்கையாளர்களின் இன்கமிங் சேவையை நிறுத்துவது மற்றும் சேவையை ரத்து செய்வது முதலியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

Post a Comment