GPM பைத்துல்மால் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது



GPM பைத்துல்மால் சார்பாக கஜா புயல் பாதித்த நாட்களில் இருந்து இதுவரைக்கும் எதுவும் கிடைக்காத நிலையில் இருந்த மறக்கவலசை, உடையநாடு, ரெகுநாதபுரம் பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் கோபாலப்பட்டினத்தில் இருந்து ஐந்து பேர் கொண்ட குழு சென்று பாதிக்கப்ட்ட மக்களுக்கு சுமார் 200 பொட்டலங்களை நேரடியாக வழங்கினர்.

கஜா புயல் அவசர வேண்டுகோள்:
எங்கள் கிரமம் புயலின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. சாப்பாடு கூட கிடைத்துவிடுகின்றன.
#குடிப்பதற்கு_தண்ணீர் இல்லாமல் மக்கள் படக்கூடிய துயரம் மிகவும் கொடூரமாக உள்ளது.





உதவக்கூடிய நண்பர்கள் யாரும் இருந்தால்  தயவுசெய்து
#வாட்டர்_பாக்கெட்_மூடை
#20லிட்டர்_வாட்டர்_கேன் 
#மெழுகுவர்த்தி 
#தீப்பெட்டி 
#பிரட்
இவை மட்டும் கூட போதும்.

உங்களுடைய நிதிகளை இவற்றிற்காக மட்டும் செலவு செய்யுங்கள் என்று அந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Post a Comment