திருச்சியில் இருந்து புறப்பட்ட FlyScoot விமானம், மேலெழும்ப முடியாமல் ஓடுதள விளிம்பு வரை சென்றதால் பதற்றம் நிலவியது.
சிங்கப்பூர் செல்லும் FlyScoot (A320) அந்த விமானம் இன்று (02/12/2018) அதிகாலை 115 பயணிகளுடன் புறப்பட்டது. ஓடுதளத்தில் அதிவேகத்தில் சென்ற விமானத்தால் மேலெழும்ப முடியவில்லை.
பல கட்ட முயற்சிகளும் பலனளிக்காததால் ஓடுதளத்தின் தடுப்புச் சுவரில் விமானம் மோதும் சூழல் உருவானது. இதனால் பதற்றம் சூழ்ந்து கொண்ட நிலையில், சமயோசிதமாக செயல்பட்டு விமானி வேகத்தைக் குறைத்தார்.
ஓடுதளத்தின் விளிம்பில் சென்று விமானம் நின்றதால் பயணிகள் உறைந்தனர். இதை அடுத்து முனையத்திற்கு விமானம் கொண்டு வரப்பட்டு பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டு வேறு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.