புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபலப்பட்டினம் மண்ணின் மைந்தர் K.K.O.அஹமது இம்தியாஸ் அவர்களின் மகன் முஹமது நயீம் சவூதி அரேபியா தேசிய கிரிக்கெட் (SCC) வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்று அங்கு மலேசியா - சவூதிஅரேபியா நாடுகளுக்கிடையேயான 19 வயதிற்குட்பட்ட ஒருநாள் மற்றும் 20/20 விளையாட்டுகளை முடித்துவிட்டு அங்கிருந்து தாய்லாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கட்டிற்கான ஆசியா டிவிசன் 1 தகுதி சுற்றுக்கான விளையாட்டில் நான்கு நாடுகளுடன் ஒருநாள் போட்டி விளையாடுகிறார்.
இந்த அரியவாய்ப்பைத் தந்த இறைவனுக்கும், சவூதி கிரிக்கெட் சென்டர் (SCC)க்கும் நன்றி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் ஒரேவீரரான இவர் இப்போட்டிகளில் வெற்றிபெற்று சவூதி அரேபியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திப்போம்.