ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக, காங், அமமுக வேட்பாளர்கள் உள்பட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிந்தது. இதில் மொத்தம் 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 4 பேர் அரசியல் கட்சியினரின் மாற்று வேட்பாளர்கள் ஆவர்.
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், தொகுதித் தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆய்வின் அடிப்படையில் மனு ஏற்கப்பட்டவர்கள் விவரம்:
கே.நவாஸ்கனி (திமுக), அ.ஷாஜகான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாற்று வேட்பாளர்), என்.நயினார் நாகேந்திரன் (பாஜக), கா.பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்), ர.கலைஜோதி (நாம் தமிழர்), தி.புவனேஸ்வரி (நாம் தமிழர்), ஜி.கேசவ்யாதவ் (பூர்வாஞ்சல் ஜனதா கட்சி), ப.லோகநாதன் (பிரகதிசீல் சமாஜ்வாதி), ஜா.விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்),
சுயேச்சையாக கருதப்படும் வேட்பாளர்கள் விவரம்:
அ.அசன்அலி, இ.அல்லாபிச்சை, மா.ஆனந்தராஜ், செ.ஆனந்த், ந.ஆனந்த், நா.கதிரவன், ந.கருப்பசாமி, பா.கிருஷ்ணராஜா, கா.குருந்தப்பன், தேவசித்தம், து.நடராஜன் (அமமுக மாற்று), சு.பிரபாகரன், ச.முகம்மதுஅலிஜின்னா, க.ரஜினிகாந்த், ஆ.வனிதா (அமமுக மாற்று), வ.விநாயகமூர்த்தி, எச்.ஜவஹிர்அலி, ரா.ஜெயபாண்டியன்.
தேசிய மக்கள் கட்சி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல என்றும் அதனால் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்த எபனேஸ்வருக்கு, சுயேச்சை வேட்பாளரைப் போல்10 பேர் முன் மொழியாமல், அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் போல 5 பேர் முன் மொழிந்திருந்தனர்.
இதனால் அவரது மனுவானது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரைப் போல ஆவணங்கள், முன்மொழிந்தவர்கள் விவரங்கள் சரியாக இல்லை என்ற அடிப்படையில் மேலும் 8 சுயேச்சைகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.