புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டும் பணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், மாணவ, மாணவிகளுக்கான பேச்சு- கட்டுரைப் போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைகளில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் ஒட்டுவில்லைகளை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
நாளொன்றுக்கு 4887 எரிவாயு உருளைகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வீட்டுக்கே சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஆட்சியர் உமாமகேஸ்வரி. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராதா ஜெயலட்சுமி, வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.