புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கை



புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டும் பணியை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான், மனிதச் சங்கிலி, கையெழுத்து இயக்கம், மாணவ, மாணவிகளுக்கான பேச்சு- கட்டுரைப் போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைகளில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் ஒட்டுவில்லைகளை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. 

நாளொன்றுக்கு 4887 எரிவாயு உருளைகள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வீட்டுக்கே சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஆட்சியர் உமாமகேஸ்வரி. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராதா ஜெயலட்சுமி, வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments