முஸ்லிம் நிறுவனத்திற்கு எதிராக பொய் தகவல் பரப்பிய இந்துத்வா டிவி சேனலுக்கு ரூ 50 லட்சம் அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மலபார் கோல்டு ஜுவல்லரி நிறுவனத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதாக மார்ஃபிங் செய்யப்பட்ட போலியான வீடியோ ஒன்றை இந்துத்வா டிவியான சுதர்சன் டிவி செய்தி ஒளிபரப்பியது.
இந்த வீடியோ பொய்யானது என்றும் அப்படி எந்த நிகழ்ச்சியும் கொண்டாடப்படவில்லை என்றும் டிவி சேனலுக்கு எதிராக மலபார் கோல்டு நிறுவன தலைவர் ஏ.பி அஹமது, கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள தீர்ப்பில் சுதர்சன் டிவி பொய்யான தகவல் வெளியாக்கியது உண்மை என்றும், மலபார் கோல்டு நிறுவனத்திற்கு சுதர்சன் டிவி ரூ 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.பி அஹமது, இந்த தீர்ப்பு உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
Source: http://www.inneram.com/india/20282-court-imposes-fine-on-anti-muslim-channel.html
Source: http://www.inneram.com/india/20282-court-imposes-fine-on-anti-muslim-channel.html
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.