புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்கள் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை நடைபெறாது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தல் 2019 அட்டவணை 10.03.2019 அன்று வெளியிடப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் 10.03.2019 முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதிநாள் கூட்டம் மற்றும் அம்மா திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுபெறும்வரை நடைபெறாது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.