ஆர்.புதுப்பட்டினத்தில் தமுமுக & மமக கிளையின் ஆலோசனை கூட்டம்



மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அவர்களை வெற்றிபெறச் செய்ய மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக களபணியாற்றுவது குறித்து முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று 14/03/2019 (வியாழக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் S.அஜ்மல் கான் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து தற்செயல் விடுப்பில் தாயகம் வந்துள்ள தமுமுக ரியாத் மத்திய மண்டல தலைவர் OMS. நூர் முகம்மது கலந்து கொண்டு பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கு நடக்கும் யுத்தத்தில் பசிசத்தை வேரறுக்க நாம் எப்படி செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொறுப்பு தலைவர் நவாஸ்கான்  நமது அரசியல் எதிரியை வீழ்த்த நமது களப்பணியை வீரியமாக செய்ய அனைத்து இளைஞர்களையும் தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார். உடன் ஆர்.புதுப்பட்டினம் கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.



தகவல்:
தமுமுக ஊடக பிரிவு 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

Post a Comment

0 Comments