மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அவர்களை வெற்றிபெறச் செய்ய மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக களபணியாற்றுவது குறித்து முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று 14/03/2019 (வியாழக்கிழமை) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் S.அஜ்மல் கான் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தற்செயல் விடுப்பில் தாயகம் வந்துள்ள தமுமுக ரியாத் மத்திய மண்டல தலைவர் OMS. நூர் முகம்மது கலந்து கொண்டு பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கு நடக்கும் யுத்தத்தில் பசிசத்தை வேரறுக்க நாம் எப்படி செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மாவட்ட பொறுப்பு தலைவர் நவாஸ்கான் நமது அரசியல் எதிரியை வீழ்த்த நமது களப்பணியை வீரியமாக செய்ய அனைத்து இளைஞர்களையும் தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார். உடன் ஆர்.புதுப்பட்டினம் கிளை சகோதர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
தமுமுக ஊடக பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.