அரசநகரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஜமாத் மற்றும் வளர்பிறை மன்றத்தின் சார்பாக கல்விச் சீர் விழா



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 60,000 மதிப்பில் ஊர் ஜமாத் மற்றும் வளர்பிறை நற்பணி மன்றத்தின் சார்பாக கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி (07/03/2019 வியாழக்கிழமை) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜமாத்தார்கள் தலைமை தாங்க,  அரசை வளர்பிறை நற்பணி மன்றத்தார்கள் முன்னிலை வகித்தனர் .

திருமதி.ஜோ.லதா பேபி, M.A,M.ED., M.B.L,  அவர்கள் வட்டார கல்வி அலுவலர், ஆவுடையார்கோவில். திரு.நா. சண்முகநாதன் அவர்கள் M.A, M.ED M.Phil, மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆசிரியர் மன்றம், திருமதி.வி.அனிதா M.Sc,B.ED, M.Phil அவர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆவுடையார்கோவில், திரு.செ.நல்ல முகம்மது,M.A.,B.ED.,M.Phil அவர்கள் தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பரமந்தூர் (ஒன்றியச் செயலாளர், ஆசிரியர் மன்றம்). திரு.த.முத்துராமன்,M.A,B.Ed அவர்கள் ஆசிரியர் பயிற்றுநர், ஆவுடையார்கோவில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.





சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,  மாணவ மாணவிகள் நன்றாக படித்து ஊருக்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதி மொழியுடன் வகுப்புகளுக்கு சென்றார்கள்.இவ்விழாவை பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ராமசாமி மற்றும் சக ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக ஆசிக் இக்பால் 

Post a Comment

0 Comments