மருத்துவம் குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது. இந்த மருத்துவக் கண்காட்சியானது பிப்ரவரி -27-லில் தொடங்கி மார்ச் 8-ம் தேதியுடன் முடிவடைந்தது.
மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி மீது அறிவையும் , ஆர்வத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிடும் காட்சி:
பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தினை மேம்படுத்தும் விதமாக இ .ஐ .டி பாரி சர்க்கரை ஆலைக்கு அறிவியல் களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு சர்க்கரை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் காணும்வாய்ப்பை பெற்றனர். மேலும் கரும்பிலிருந்து சர்க்கரை எவ்வாறு தயாராகிறது என்பதினை செயல்விளக்கத்துடன் விளக்கிய இ .ஐ .டி பாரி சர்க்கரை ஆலையின் மனிதவள மேலாளர் திரு. லட்சுமணன் அவர்களுக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் எம் பள்ளியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: வாசிம் கான்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.