உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சார்புக்குழுமமான பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழு, வெள்ளிக்கிழமை மார்ச் 8ம் தேதி, இந்தியன் கிளப் வளாகத்தில் அமைந்துள்ள ஔவையார் கல்விக்கூடத்தில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பஹ்ரைன் வாழ் தமிழ் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முதல் போட்டியை குழுவின் ஆதரவாளர்களான சுபியா இணையதுல்லா மற்றும் கலைவாணி விவேகானந்தன் தொடங்கிவைத்தனர்.
பல சுற்றுக்களாக நடைபெற்ற தொடர்போட்டியில் முதல் பரிசை சாந்தி ஜெயராம், இரண்டாம் பரிசை ப்ரியா மோகன் மற்றும் மூன்றாம் பரிசை பிருந்தா செந்தில்குமார் ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றது. மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர். பெ. கார்த்திகேயன் “தமிழர் பண்பாட்டில் பல்லாங்குழி ஆட்டம் என்பது பெண்களின் கணித திறமையை வளர்பதற்கும் நினைவாற்றலை மேன்படுத்துவதர்க்கும் பயன்படுவதோடு ஒரு இடத்திலிருக்கும் குவிந்திருக்கும் செல்வதை எடுத்து அனைவருக்கும் பகிர்தளித்தல் என்ற கோட்பாடையும் வலியுறுத்துகிறது. அனைத்து தொன்மையான கலாச்சாரங்களில் இதை பற்றிய தகவல்கள் உள்ளது, குறிப்பாக எகிப்து பிரமிடுகளின் பல்லாங்குழியின் படங்கள் வரையப்பட்டுள்ளன” என்று கூறினார்.
பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் பேசும்போது “நமது தமிழ் பெண்கள் மறந்த மறந்துகொண்டிருகின்ற பல கலாசார விளையாட்டுக்கள் நமது குழுவின் மூலம் மீட்டுக்க தொடர்ந்து பல நிகழ்சிகளை முன்னெடுப்போம்” என்று கூறினார். அரபு நாடுகளிலேயே பல்லாங்குழி தொடர்பான முதல் நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.