இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் பல்வேறு நாவல் கம்மாண்டில் குரூப் - ‘சி’ பிரிவில் டிரேட்ஸ்மேன் மேட் என்ற பணிக்கு, 554 காலிப்பணியிடங்களுக்கான இந்திய கடற்படை சிவிலியன் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும், உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 02.03.2019, காலை 10.00 மணி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2019, மாலை 05.00 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 15.03.2019
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 11.04.2019
காலிப்பணியிடங்கள்:
Headquarters Eastern Naval Command, Visakhapatnam (HQENC) - 46
Headquarters Western Naval Command, Mumbai (HQWNC) - 502
Headquarters Southern Naval Command, Kochi (HQSNC) - 06
மொத்தம் = 554 காலிப்பணியிடங்கள்:
தேர்வுக்கட்டணம்:
பொதுப் பிரிவினர் மற்றும் ஆண்கள்: ரூ. 205
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PwBD / பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை
சம்பளம்:
குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கான வயது குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ அல்லது ஐடிஐ சான்றிதழ் படிப்பை முடித்தவராகவோ இருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் இந்திய கடற்படையின் இணையதளமுகவரியான, www.joinindiannavy.gov.in -> Join Navy -> Ways to Join -> Civilians -> Tradesman Mate - இல் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடங்கள் குறித்து, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுடைய தொலைபேசி எண்ணுக்கும், இ-மெயில் ஐடிக்கும் தகவல்கள் பின்னர் அனுப்பப்படும்.
மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற:
http://incetrecruittmm.in/intmmfeb19/uploads/loadpdf.php?file=k7m5+fQk9G2ztjgx87Hm6KV2sm0cN7Yk6ed13A=&t=xa3HrKHRyM4=#toolbar=0&navpanes=0 - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
Source: Puthiyathalaimurai
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.