பாராளுமன்ற பொது தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தல் தொடர்பாக திருமணமண்டபம், திரையரங்கம், தங்கும்விடுதி, அடகு கடை மற்றும் வட்டிக்கடை, அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (13.03.2019) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் 18.04.2019 அன்று நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தினால் அதற்கான செலவுத் தொகை அவர்களது தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும். எனவே இதன் விபரத்தை தினந்தோறும் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
இதே போன்று நகை அடகு கடை மற்றும் வட்டிக் கடை உரிமையாளர்கள் தங்களது வரவு செலவு விபரங்கள் அடங்கிய தினசரி அறிக்கைகளை சம்மந்தப்பட்ட தொகுதியில் உள்ள அலுவலருக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கூட்டங்கள் நடத்தவும் மற்றும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் பயன்படுத்தினால் அதுகுறித்த செலவுத் தொகை விபரங்களை அச்சக உரிமையாளர்கள் தினமும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும்.
இதன் மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் உரிம விதிகளை தவாறாமல் கடைபிடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் பாராளுமன்ற பொது தேர்தல் அமைதியாகவும, நேர்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.ராமசாமி, உதவி ஆணையர் (கலால்) திரு.கார்த்திகேயன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகம், திருமண மண்டபம், திரையரங்கம், நகை அடகுகடை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.