தமிழகம் முழுவதும் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை அதிகளவில் அரசில் கட்சியினர் பொதுமக்களை கூட்டாக அழைத்துச் செல்லவும், ஒரே சமயத்தில் வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வரவும் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவுகளை பிறிப்பித்துள்ளது. இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க கோரி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Facebook Like: https://www.facebook.com/gopalappattinamblog/
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.