புதுக்கோட்டை நகரில் நள்ளிரவில் பல்சர் வாகனத்தின் சைடுலாக்கை உடைத்து வண்டியைத் திருடிச் செல்லும் சிசிடிவி பதிவுடன் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகன் பிரகாஷ். புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல அலுவலக வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதையடுத்து அதே பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் பார்க்கப்பட்டன.
ஒரு சிசிடிவி பதிவில், நள்ளிரவில் அந்த பல்சர் வாகனத்தின் அருகே நின்று கொண்டு சைடு லாக்கை காலால் உதைத்து உடைத்து, வண்டியைத் திருடிச் செல்லும் காட்சி இருந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளுடன் நகரக் காவல் நிலையத்துகு வியாழக்கிழமை சென்ற பிரகாஷ் புகார் அளித்தார்.
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகன் பிரகாஷ். புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல அலுவலக வாசலில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இதையடுத்து அதே பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் பார்க்கப்பட்டன.
ஒரு சிசிடிவி பதிவில், நள்ளிரவில் அந்த பல்சர் வாகனத்தின் அருகே நின்று கொண்டு சைடு லாக்கை காலால் உதைத்து உடைத்து, வண்டியைத் திருடிச் செல்லும் காட்சி இருந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளுடன் நகரக் காவல் நிலையத்துகு வியாழக்கிழமை சென்ற பிரகாஷ் புகார் அளித்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.