புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தலைமை அஞ்சலகத்தில் "மை ஸ்டாம்ப்' மையம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டையை அடுத்து இரண்டாவதாக இங்கு தொடங்கப்பட்ட மையத்தை தொடங்கிவைத்து புதுக்கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளர் சி. சுவாதி மதுரிமா பேசியது:
இந்த மையத்தில் யார் வேண்டுமானாலும் ரூ. 300 செலுத்தி தங்களது படத்தையோ அல்லது குழந்தைகள் மற்றும் தலைவர்கள் படம் உள்ளிட்டவற்றை இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இயந்திரம் மூலம் ஸ்டாம்புகளாக உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.இவற்றை தபால் போக்குவரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் வில்லைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அஞ்சல ஆய்வாளர் எம். கார்த்திக், அஞ்சல் அலுவலர் ஜி. ராதை ஆகியோர் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.