அதிமுக மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து.
வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வைத்து துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம், முதல்வரும் கழக இணை -ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் அடங்கிய குழு தேர்தல் அறிக்கையை தயாரித்தது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை பன்னீர் செல்வம் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவிற்கு ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்தார். தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் சமூகநீதிக் கொள்கையில், மதச்சார்பின்மையில் அதிமுக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார்.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்ட தேர்தல் அறிக்கை பின்வருமாறு
*அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வங்கி கணக்கில் உதவித் தொகை ரூ.1,500 வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இந்த பணம் வழங்கப்படுகிறது.
*கைவிடப்பட்ட பெண்கள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1.500 வழங்கப்படும்.
*புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.
*இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்.
*எம்.ஜி.ஆர் திறன் வளர்ச்சி திட்டத்தில் மூலமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
*மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*கடலில் கலக்கும் நீர் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
*வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
*காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*காவிரி இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.
*மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*வேளாண் கடன்களுக்காக உறுதியான திட்டம் ஒன்றை கொண்டு வருவோம்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.
*நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.
*எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி மக்களுக்காக புதிய இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்படும்.
*தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
*பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
*புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.