இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் (PIA) ரியாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்திராஹா மகிழக நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.
வரவேற்புரைக்குப் பின்னர், குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி, பேச்சுப் போட்டி நடைபெற்றது.
வெள்ளி சிறப்புத் தொழுகையில் உரையாற்றிய கு.நிஜாமுதீன் மிஃராஜ் இரவு பற்றி தர்க்க ரீதியாக விளக்கினார். மேலும் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா திட்டங்கள் எதிர்க்கப்பட வேண்டியதன் தேவையையும் பொள்ளாட்சிக் கொடூரங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றியும் சிறப்பாகப் பேசினார்.
கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தங்களின் ஆதங்கத்தையும் முழக்கங்களையும் ஒரு காணொளியில் பதிவு செய்தனர். ஜும்மா தொழுகைக்கு பிறகு மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை சேர்ந்த ரியாத் வாழ் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் எல்லாம் கலந்து சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மெளலவி நூஹ் அல்தாஃபி சொந்தபந்தம் பேணுவது சொர்க்கத்திற்கு வழி என்ற தலைப்பில் மிகவும் அற்புதமான உரை நிகழ்த்தினார்.
இறுதியில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துஆ ஓதி கூட்டம் முடிவுப்பெற்றது.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் செயற் குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.