ரியாத்தில் மாணவ-மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது



ரியாத் மாநகரில் நேற்றையதினம் 24.03.2019 பத்தாஹ் ஷிஃபா மருத்துவமனை கூட்ட அரங்கில் பள்ளி மாணவ-மாணவிகள் அடுத்து எந்த துறையை தேர்வு செய்வது எப்படி தேர்வு செய்வது போன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் அவர்களது விருப்பப்படி உயர்கல்வியை தேர்ந்தெடுக்க ஏதுவாக உள்ள சைக்கோமெட்ரிக் தேர்வை எழுதி அவர்களது விருப்பப்பாடங்கள் எதுவென்று எளிதில் தெரிந்து கொண்டனர்.

இந்த தேர்வை உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் நடத்தினார். மேலும், பெற்றோர்களுக்குத் தேவையான கல்வி விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை ரியாத் மண்டல தமுமுகவும், விழி அமைப்பும், சென்னை மாஸ்டர்மைன்ட் கன்சல்டிரைனிங் நிறுவனமும் இணைந்து நடத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 


Post a Comment

0 Comments