இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2019-20-ம் கல்வி ஆண்டில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் கடந்த 22-ந் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற மே மாதம் 18-ந் தேதி ஆகும்.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் தொடக்க நிலை வகுப்புகள் எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க ஏதுவாக மொத்த இடங்களில் 25 சதவீதம் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
எல்.கே.ஜி சேர்க்கைக்கு 31.7.2019 அன்று மாணவரின் வயது 3 முடிவடைந்திருக்க வேண்டும்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கு 31.7.2019 அன்று மாணவரின் வயது 5 முடிவடைந்திருக்க வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினராக இருந்தால் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் போது உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன் பொருட்டு பெற்றோரின் ஆண்டு வருமான சான்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எனவே பெற்றோர் சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகளை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இருப்பிட சான்று, குழந்தையின் புகைப்பட சான்று, ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, பிறப்பு சான்று, சாதி சான்றினை அளித்து எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கலாம். அல்லது பள்ளி கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamil-nadu/student-registration என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கல்வி கட்டணமும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பெறமாட்டார்கள். எனவே இந்த நல்ல வாய்ப்பினை பெற்றோர் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மாணவர்கள் பதிவுக்கான வழிமுறைகள்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2019-20-ம் கல்வி ஆண்டில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் கடந்த 22-ந் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற மே மாதம் 18-ந் தேதி ஆகும்.
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகள் தொடக்க நிலை வகுப்புகள் எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க ஏதுவாக மொத்த இடங்களில் 25 சதவீதம் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்கு பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
எல்.கே.ஜி சேர்க்கைக்கு 31.7.2019 அன்று மாணவரின் வயது 3 முடிவடைந்திருக்க வேண்டும்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கு 31.7.2019 அன்று மாணவரின் வயது 5 முடிவடைந்திருக்க வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினராக இருந்தால் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் போது உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் பெறும் அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதன் பொருட்டு பெற்றோரின் ஆண்டு வருமான சான்று சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எனவே பெற்றோர் சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகளை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இருப்பிட சான்று, குழந்தையின் புகைப்பட சான்று, ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை, பிறப்பு சான்று, சாதி சான்றினை அளித்து எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கலாம். அல்லது பள்ளி கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamil-nadu/student-registration என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித கல்வி கட்டணமும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பெறமாட்டார்கள். எனவே இந்த நல்ல வாய்ப்பினை பெற்றோர் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மாணவர்கள் பதிவுக்கான வழிமுறைகள்:
- பெற்றோர் http://rte.tnschools.gov.in/tamil-nadu/student-registration-க்கு செல்லவும்.
- வலைத்தளத்தில் பதிவு பொத்தானை அழுத்தி மாணவர்களகளை பதியவும். .
- திறந்த பதிவு படிவத்தில் சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- கைபேசியில் நீங்கள் ஒரு பதிவு எண்ணை பெறுவீர்கள், இது தான் லாட்டரி- க்கு முக்கியமானது .
- அனைத்து வகையான தகவல்களை நிரப்பி, "தொடருக (சேமிக்கவும் மற்றும் அடுத்த) "பொத்தானை அழுத்தவும்.
- அனைத்து தகவல்களை நிரப்பிய பிறகு (சமர்ப்பி) பொத்தானை அழுத்தவும்.
- நட்சத்திர குறியீடு * பக்கத்து பகுதிகளில் தகவல் நிரப்புதல் அவசியம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.