மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிளஸ்-2 தேர்வில் 555/600 சாதனை! 100% தேர்ச்சி!!



தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 74 மாணவர்களும், 11 ஆயிரத்து 137 மாணவிகளும் என மொத்தம் 20 ஆயிரத்து 211 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதில்  மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 555/600 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 167 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.  இதில் 49 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. 
அரசு மேல்நிலைப்பள்ளி - 12 
பகுதிநேர அரசு உதவிபெறும் பள்ளி - 9 
தனியார் மேல்நிலைப்பள்ளி -  28 
பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. இதில் 28 பள்ளிகளில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன்  சாதனைப்படைத்துள்ளது.


ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி தாலுகா அளவில் முதலிடமும் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகள் வரிசையிலும் இடம் பிடித்த மாணவன் M.அரவிந்த்தை வாழ்த்தி பள்ளி தாளாளர் முகம்மது யூசுப் அவர்கள் சால்வை அணிவித்தார்.

மதிப்பெண் விபரம்:

முதல் மதிப்பெண் - 555 /600
இரண்டாவது மதிப்பெண் - 516 / 600
மூன்றாவது மதிப்பெண் - 501 / 600 (கோபாலபட்டினத்தை சேர்ந்த மாணவி)

550 - மதிப்பெண்களுக்கு க்கு மேல் -01 மாணவன்.
500 - மதிப்பெண்களுக்கு க்கு மேல் -03 மாணவர்கள்.
470 - மதிப்பெண்களுக்கு க்கு மேல் -04 மாணவர்கள்.
450 - மதிப்பெண்களுக்கு க்கு மேல் -08 மாணவர்கள்.
400 - மதிப்பெண்களுக்கு க்கு மேல் -15 மாணவர்கள்.

கோபாலப்பட்டினம் இணையதளம் மற்றும் GPM Media Team சார்பாக வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments