வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என இந்தியன் ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது!
வங்கிகளுக்கு வாரம் ஆறு நாள் பணி என்னும் நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது, மேலும் இரட்டைபடை சனி கிழமைகளில் விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வங்கிகளுக்கு இனி ஐந்து நாட்கள் பணி மற்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வங்கிகள் செயல்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இரட்டை படை சனி அன்று விடுப்பு என்னும் வழகத்தை கைவிட்டு அனைத்து சனி கிழமைகளிலும் விடுப்பு என்னும் நடைமுறை வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தவறானது எனவும், அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவிக்கையில்., "ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பேரில் வங்கிகளுக்கு ஐந்து நாள் பணி என்னும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில் சரியானது இல்லை, ரிசர்வ் வங்கி அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் நெடு நாட்களாக 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவ்வாறான செய்திகள் தவறுதலாக பரவி இருக்கலாம் என தெரிகிறது. எனினும் இதுவரையில் வங்கி ஊழியர்களின் 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி செவிசாய்க்க வில்லை என்பது.
முன்னதாக இந்திய வங்கி சங்கம்(IIBA) 5 நாள் பணி நடைமுறை குறித்து நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்ததாகவும், இது நாள் வரை இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகளுக்கு வாரம் ஆறு நாள் பணி என்னும் நடைமுறை தற்போது வழக்கத்தில் உள்ளது, மேலும் இரட்டைபடை சனி கிழமைகளில் விடுப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வங்கிகளுக்கு இனி ஐந்து நாட்கள் பணி மற்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வங்கிகள் செயல்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இரட்டை படை சனி அன்று விடுப்பு என்னும் வழகத்தை கைவிட்டு அனைத்து சனி கிழமைகளிலும் விடுப்பு என்னும் நடைமுறை வழக்கத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தவறானது எனவும், அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் தெரிவிக்கையில்., "ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பேரில் வங்கிகளுக்கு ஐந்து நாள் பணி என்னும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையில் சரியானது இல்லை, ரிசர்வ் வங்கி அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் நெடு நாட்களாக 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவ்வாறான செய்திகள் தவறுதலாக பரவி இருக்கலாம் என தெரிகிறது. எனினும் இதுவரையில் வங்கி ஊழியர்களின் 5 நாள் பணி என்னும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி செவிசாய்க்க வில்லை என்பது.
முன்னதாக இந்திய வங்கி சங்கம்(IIBA) 5 நாள் பணி நடைமுறை குறித்து நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்ததாகவும், இது நாள் வரை இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.