மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பரிசளிப்பு மற்றும் பட்டமளிப்பு விழா!!!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா 12/04/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

விழாவிற்கு ஆவுடையார் கோவில் வட்டார தலைமை மருத்துவர் (ஓய்வு) டாக்டர். சுந்தரவடிவேலு  அவர்கள் தலைமை தாங்கினார்கள். பள்ளியின் தாளாளர் திரு.முகமது யூசுப் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

அதனைத்தொடர்ந்து யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.



சிறப்பு விருந்தினர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் திரு.திவ்யபிரகாஷ் அவர்கள் மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை  வழங்கி வெற்றிப் பெற்ற மாணவர்களையும் அதற்கு உறுதுணையாகயிருந்த ஆசிரியிர்களையும் பாராட்டி சிறப்புரையாற்றினார், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் திரு.தனிக்கொடி அவர்கள் மாணவர்களின் நற்பண்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

 மேலும் விழாவிற்கு நாட்டாணி புரசக்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திரு.முகமது மீராசா , பொதுநல சேவகர்கள்  திரு.இம்ரான்கான், திரு.ஜியாவுதீன், கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் M.அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள், வர்த்தக சங்க தலைவர் திரு.பிரியம்.J.காதர்,செயலாளர் திரு.அய்யா ரமேஷ்,  இந்தியன் ரெட் கிராஸ் தாலுகா செயலாளர் திரு. மலையாண்டி, S.V மெடிக்கல் உரிமையாளர் திரு.அன்பரசன் மற்றும் பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளையும் ,பட்டங்களையும் வழங்கி சிறப்பித்தனர்.








மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கரகாட்டமும், சிலம்பாட்டமும் பெற்றோர்களையும், விருந்தினர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு வாசிம்கான் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளியின் P.R.O திரு. தங்கராஜ் அவர்கள் ஒருங்கினைத்தார்.

அன்புடன்
நிர்வாகம்
பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மீமிசல்
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு : 
94424 95007
04371-243007

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக : வாசிம் கான்

Post a Comment

0 Comments