தவ்ஹீத் ஜமாஅத் புதுகை மாவட்ட அம்மாபட்டினம் கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது சபீர்தீன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ஷேக் தாவூத், செயலாளர் பைரோஸ்கான் , பொருளாளர் முஹம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி, பேச்சாளர் அப்துல்பாரி சிறப்புரையாற்றினர்.
இதில், அம்மாபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் கழிப்பறை வசதியும் மோசமாகவும், நோய் தொற்றும் அளவிற்கு உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட துறை சரி செய்யுமாறு இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.
மேலும் அம்மாபட்டினம் ஊராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் மருத்துவம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் (செவ்வாய்க்கிழமை மட்டும் 80க்கும் மேற்பட்ட மக்கள்) சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அங்குள்ள மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்புகின்றனர்.
இதனால் கர்ப்பிணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பொருளாதார ரீதியிலும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஸ்கேன் கருவியை அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்குமாறு இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். அம்மாபட்டினம் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகிறது.
இதனை பலமுறை சம்மந்தப்பட்ட துறைக்கு வலியுறுத்தியும் அது சரி செய்யப்படவில்லை. இதனை துரிதமாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையை இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.செயற்குழுவில் அதிகமான தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில், அம்மாபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் கழிப்பறை வசதியும் மோசமாகவும், நோய் தொற்றும் அளவிற்கு உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட துறை சரி செய்யுமாறு இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம்.
மேலும் அம்மாபட்டினம் ஊராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் மருத்துவம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் (செவ்வாய்க்கிழமை மட்டும் 80க்கும் மேற்பட்ட மக்கள்) சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அங்குள்ள மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்புகின்றனர்.
இதனால் கர்ப்பிணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பொருளாதார ரீதியிலும் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு சம்மந்தப்பட்ட நிர்வாகம் ஸ்கேன் கருவியை அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்குமாறு இந்த செயற்குழு வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். அம்மாபட்டினம் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வருகிறது.
இதனை பலமுறை சம்மந்தப்பட்ட துறைக்கு வலியுறுத்தியும் அது சரி செய்யப்படவில்லை. இதனை துரிதமாக சரி செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறையை இந்த செயற்குழுவின் வாயிலாக கேட்டு கொள்கிறோம் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.செயற்குழுவில் அதிகமான தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.